சிதம்பரம் வீனஸ் பள்ளி மற்றும் இன்னர் வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். ‘குழந்தைகள் வளர்ப்பு’ குறித்த மலரை சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் வெளியிட்டு உரையாற்றினார். ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு கேடயம், சான்றுகளை வழங்கி பாராட்டினார். இதில் குழந்தைகள் நல மருத்துவர் சிவப்பிரகாசம், பெண்கள் மருத்துவர் பத்மினி இன்னர் வீல் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.