சிதம்பரம், ஏப். 27- சிதம்பரம் உசூப்பூர் சபா நகரை சேர்ந்தவர் திருஞானம். இவர் இந்தியன் வங்கியில் அடகு வைத்த 3.5 சவரன் தங்க சங்கிலியை மீட்டு தனது சட்டைப் பையில் வைத்த போது நகை கீழே தவறிவிட்டது. அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான் தங்க சங்கிலி இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையெடுத்து ஏ.எஸ்.பி ரகுபதி உத்தரவின்படி சிதம்பரம் நகர காவல் துறையினர், குற்றப்பிரிவு தனி படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெண் ஒருவர் கீழே கிடந்த நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னலூரை சேர்ந்த அந்த பெண்ணிடமிருந்து நகையை மீட்டு சம்பந்தப்பட்ட திருஞானத்திடம் சிதம்பரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஒப்படைத்தார்.