districts

img

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ 5.73 லட்சத்தில் கட்டடப் பணிகள் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம், ஆக. 12- 

      சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவ மனை வளாகத்தில் 100 படுக்கைகள் வசதி கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டி டம் பணி ரூ. 5 கோடியே 73 லட்சத்தில் நடை பெறுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

    மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்பு ராஜ், உதவி ஆட்சியர் சுவேதா சுமன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லட்சுமி வரவேற்றார்.

    பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தற்போது துவங்கியிருக்கும் பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப் படும்” என்றும் சிதம்பரம் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்திற்கு ரூ. 213 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

   மேலும் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்கு  2 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.40 கோடி செலவில் புறநகர் வெளிப்புற சாலை அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.