சிதம்பரம், ஆக. 8-
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலைக் கல்லூரிகளுக்கு நடந்து முடிந்த தேர்வின் முடிவு களை உடனடியாக வெளி யிடாததை கண்டித்து சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள குளறுபடியான தேர்வு முடிவுகளைக் கண்டித்தும், தேர்வு முடிவு குளறுபடிகளை விரைந்து சரி செய்ய வலியுறுத்திக் கல்லூரியில் இருவேலை பாடப்பிரிவு மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலா ளர் சௌமியா உள்ளிட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர்.