districts

img

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஆங்கில இலக்கண வகுப்பு நிறைவு

சிதம்பரம், மே 25-

    சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளி யில் 39-ஆவது ஆண்டு கோடைகால ஆங்கில இலக்கணம் மற்றும் பேச்சு பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் அன்பானந்தம் உரையாற்றினார்.

   முன்னதாக பள்ளியின் நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் போனீங்களா வர வேற்றார். பள்ளியில் துணை முதல்வர் அறிவழகன் ஆங்கில இலக்கணத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.