சென்னை,மார்ச்.9- சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் மார்ச்.11(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து பகுதி அலுவலகங்களில் நடக்கி றது. இந்த கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்பு கள் தொடர்பான சந்தே கங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.