கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிப்படைவசதிகள் : சிபிஎம் வலியுறுத்தல்
கெலமங்கலம்,டிச.29- கெலமங்கலம் ஒன்றியத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத 40 க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு கெலமங்கலம் மேம்ப டுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை நம்பி யுள்ளனர். ஆனால் இங்கு தேவைக்கேற்ப கட்டிடங்கள்,கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. 50 ஆண்டுகள் கடந்த நிலையில் 2006 வாக்கில் கட்டப்பட்ட பலகட்டிடங்களும், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அறுவை சிகிச்சை கூடம் மேற்கூரை கடும் சேதமடைந்து சிறு மழைக்கே உள்ளே மழை நீர் கொட்டுகிறது. பழைய கட்டிடங்களின் சுவர்கள் அனைத் தும் ஈரமான நிலையில் பல சுவர்கள் விரிசல் விழுந்துள்ளது. பிரசவ வார்டுக்கும் போதிய கட்டிடம் இல்லை. அனைத்து அறைகளும் மிகச் சிறியதாகவும்,நோயாளிகள் அமருமிடம் குறுகளாகவும் நெருக்கடியாகவும் சந்து போல் உள்ளது.கெலமங்கலத்தில் மட்டுமே 20 ஆயிரம் பேர் உள்ளனர். எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மருத்து வமனைக்கு தேவையான அனைத்து வசதிக ளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். கடம குட்டை, பெட்டமுகிலாலம் உட்பட 40 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு சாலைகள் அடிப்படை சுகாதார வசதிகள் உடனடியாக செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செய லாளர் ஆர்.ஜி.சேகர் மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டியலின ஊராட்சி தலைவரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை
திருவண்ணாமலை, டிச.29- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவராக, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் (தனி) ஊராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பட்டியலினத்தை சேர்ந்த வர் ஜெயலட்சுமி. கட்டமடுவு ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இதில் துணை தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பாப்பாத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை தலைவரின் கனவர் ரமேஷ், ஊராட்சி நிர்வாகத்தை ஜனநாயக ரீதியில் செயல்படவிடாமல் முடக்குவது, சாதியை சொல்லி இழிவுபடுத்துவது என, பல முணைகளில் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, ஊராட்சி பணிகள் ஏதும் நடைபெறாமல் தடுப் பது. கல்விக் குழுத் தலைவராக, தலைவருக்கு பதில் வேறு ஒருவரை நியமிப்பது என, தலைவரை அவ மானப்படுத்தும் செயல்களில் ஈடு பட்டு வந்தனர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர் அமரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தலைவரை தரையில் அமர வைக்கும் சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24.12.2021 அன்று துணை தலைவரின் கணவர் ரமேஷ் தூண்டுதலின் பேரில், ரமேஷின் உறவினரும், 5 ஆவது வார்டு உறுப்பினருமான வெங்கட்ராமன் என்பவர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெங்க ட்ராமனை பார்த்து“ டேய் பறையா, உன்னால் என்னடா பன்ன முடியும், தலைவரா வந்துட்டா என்ன புடுங்கி டுவியா’’ என, பேசிய வீடியோ வைர லாக பரவியுள்ளது. இதுபோன்ற சாதிய வன்மத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரின் கனவரை மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கம் வட்ட செயலாளர் ஏ.லட்சுமணன், தண்டராம்பட்டு வட்ட செயலாளர் இரா.அண்ணாமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ப.செல்வன் நிர்வாகி எம்.சரவணன் ஆகியோர், சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர். சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொண் டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்ற தலை வர்களாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள் ஜனநாயக ரீதியா கவும் இயங்குவதை மாவட்ட நிர்வா கம் உறுதிசெய்ய வேண்டும் என, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரத்தில் பூசாரிகள் தர்ணா
விழுப்புரம், டிச.29- விழுப்புரம் மாவட்ட இந்து அறநிலைத்துறை அலுவல கத்தை முற்றுகையிட்டு பூசாரிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 688 ஊராட்சிகளும், சுமார் 1000க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன, தலித் மக்கள் சுமார் 22 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகின்றனர், ஒவ்வொரு ஊராட்சியிலும் எஸ்சி பகுதியில் சுமார் இரண்டுக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன, அவற்றில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பூசாரிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் மற்ற சமூக பகுதிகளிலுள்ள கோயி ல்களில் பணிபுரியும் பூசாரிகள் மட்டுமே நலவாரியத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தலித்பகுதி கோவில்களில் பூசாரிகளாக பணியாற்றுவோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த உதவி ஆணையர் ஜோதி அவர்களிடம் பேச்சு நடத்தி, வரும் சனிக்கிழமைக்குள் அடையாள அட்டை வழங்கு வதாக உறுதி அளித்தார், இதனைத்தொடர்ந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்சி சமூக கோயில் பூசாரிகள் கலைந்து சென்றனர்.
கூட்டுறவு அதிகாரி வசூல் வேட்டை திடீர் சோதனையில் சிக்கியது பணம்
வேலூர்,டிச.29 - வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணாசாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மாடியின் மேல் கூட்டுறவு இணை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் செயல்பட்டு வரும் ரேணுகாம்பாளின் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி ஊழியர்களிடம் பரிசு பொருட்கள் மற்றும் பணம் வசூலிப்பதாகவும், பொங்க லையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள முந்திரி, திராட்சை ஏலக்காய் உள்ளிட்டவைக்கு டெண்டர் முடிந்து, டெண்டர் எடுத்தவர்களிடம் பணம் வழங்கு வது மற்றும் ரசீது வழங்குவதற்கு பணம் வசூலிப்பது ஆகிய வற்றிற்காக லஞ்சப்பணம் புழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அங்கு திடீரென சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.2.45 லட்சம் பணம் பறி முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இணை பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை செய்தனர். பின்பு துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைத்த னர்.
வழக்கறிஞர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
திருவண்ணாமலை,டிச.29- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், சர்வே எண் 36/2A 32B ல் 0.42 செண்டை மணைப்பிரிவுகளாக 6 நபர்களுக்கு ஒப்படை செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொதுப்பாதை 9 அடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. பொதுப்பாதையில் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என, மேற்படி கிராமத்தை சேர்ந்த, சேட்டு, கண்ணன் ஆகியோர், பொதுப்பாதை எங்களுக்கு சொந்த மானது. இதில் வேறு யாரும் உரிமை கோர முடியாது என, தகராறு செய்து வந்தனர். இந்நிலையில் போளூர் வட்டாட்சியர் (தனி) முன்னிலையில் 22.09.2016 ல் அமைதி பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இப்பேச்சு வார்த்தை முடிவில் மேற்படி நபர் சேட்டு என்பவர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை காலி செய்திட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில், சட்ப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என, எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள், வழக்கறி ஞர் ரஜினிகாந்த்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 26.12.2021 அன்று, தனது வீட்டிற்கு அருகில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பின ரும், வழக்கறிஞருமான, பி. ரஜினிகாந்தை மேற்படி கும்பல், கொடூரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இத்தாக்குதலில், பலத்த காயங்களு டன், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இத்தகைய கொலை வெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, குற்றவாளிகள் மீது மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்து, கைது செய்திட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் திருவண்ணா மலை மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.