சென்னை-திருப்பதி ரயில் சேவை அக் 12 ஆம்தேதி வரை ரத்து
சென்னை,செப்.26- சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேனிகுண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மேம்பாட்டுப் பணி காரணமாக 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதில் சென்னை சென்ட்ரலில் இருந்து தின மும் காலை 6.25 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் திருப்பதி விரைவு ரயில் (எண்.16053) மற்றும் மாலை 4.35 மணிக்கு புறப்ப டும் கருடாத்திரி விரைவு ரயில் (எண்.16203) 28-ந்தேதி முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப் படும் கருடாத்திரி விரைவு ரயில் காலை 10.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் மற்றும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கூடுதல் விலைக்கு மது விற்ற இருவர் கைது
சென்னை, செப். 26- சென்னை காசிமேட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்த வினோத் குமார் (40), மது பாலா (49) இருவரும் அரசு மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கி காசி மேடு மீன்பிடி துறைமுகத் தில் கடலுக்குச் செல்லும் மீனவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து காவல் துறையினர் அவர் களை கைது செய்ததுடன் 249 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.
சென்னையில் மின்சார கார்களுடன் 3ஆம் தரப்பு போக்குவரத்து சேவை
சென்னை, செப். 26- சென்னையை தளமாகக் கொண்ட ரெஃபெக்ஸ் பசுமை வாகன நிறுவனம், பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் மூன்றாம் தரப்பு ஊழியர்களின் போக்குவரத்து சேவைகளை வழங்குவ தற்காக 2,000 மின்சார கார்களை வாங்குவதற்காக மார்ச் 2024க்குள் ரூ.240 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் இதனைத் தெரிவித்தார். தற்போது பெங்களூரில் உள்ள 8 நிறுவன வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கிவருவதாகவும் சென்னையில் 41 மின்சார கார்களுடன் சேவை தொடங்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம், 497 இ-கார்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2024 நிதியாண்டில் 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக சென்னையில் இந்நிறுவனத்தின் போக்குவரத்து சேவையை துணைமேயர் மகேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
விமானத்தில் எந்திர கோளாறு
சென்னை,செப்.26- சென்னையில் இருந்து டெல்லிக்கு செவ்வாயன்று காலை 6 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 164 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். எந்திரகோளாறு சரிசெய்யப்படாதால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த 164 பயணிகளும் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் தவித்தனர். மேலும் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த மற்ற விமானங்களில் பயணி களுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
சென்னை,செப்.26- மணப்பாக்கத்தில் உள்ள குழலி அம்மன் கோவி லுக்கு சொந்தமாக 0.85 ஏக்கர் நிலம் கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்நிலத்தினை ஆக்கிர மிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் வருவாய்துறை அலுவலர்களின் உதவி யோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப் பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.63 கோடி யாகும். இந்த அரசு பொறுப் பேற்ற 7.5.2021 முதல் இன்று வரை ரூ.5,377 கோடி மதிப்பி லான 5,773.30 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மீஞ்சூர்-அத்திப்பட்டில்
இன்று மின்சாரம் நிறுத்தம்
திருவள்ளுர்,செப்.26- மீஞ்சூரை அடுத்த மேலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து புதனன்று (செப்.27) காலை 9 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர், மேலூர்,வல்லூர் பட்டமந்திரி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அரியன் வாயல், புங்கம்பேடு, கே.ஜி.எல். பிரபு நகர், சூர்யா நகர், லட்சுமி நகர்,முரளி நகர், நாலூர், கேசவபுரம், வன்னிப்பாக்கம், சிறு வாக்கம், மடியூர், ராமாபுரம், வழுதிகைமேடு, 400 அடி ரோடு , முல்லைவாயல், கே.ஆர். பாளையம், பள்ளிப்புரம், மீஞ்சூர் நியூ டவுன், வள்ளுவர் நகர், அன்பழகன் நகர், கொண்டக் கரை, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப் படும். இந்த தகவலை மீஞ் சூர் உதவி செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.
ரவுடி வெட்டிக்கொலை
செங்கல்பட்டு,செப்.26- வண்டலூரை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் செவ்வாயன்று மோகன் ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிமங்க லம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மோகன்ராஜ் கொடூ ரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது. எனவே மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மட்டும் தனியாக இருந்த தால் கொலை நடந்தது பற்றி அக்கம்பக்கத் தினருக்கு தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பின்னரே வெளியில் தெரிந்தது. கொலை யுண்ட மோகன் ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. பல்வேறு வழக்குகளில் எதிரிகள் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்ததும் மோகன்ராஜ் டி.டி.சி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார்.
மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்தை விம்கோ நகர் வரை விரிவுபடுத்துக சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு வலியுறுத்தல்
சென்னை, செப். 26- மாதவரம் பால் பண்ணையில் இருந்து துவங்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடசென்னை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது: சென்னையில் இரண்டு வழித்தடங் களில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சி யின் சார்பில் சென்னை வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தி லிருந்து செங்குன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும், மூன்றாவது திட்டமான மாத வரம் பால் பண்ணையிலிருந்து தொடங்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தோம். இதுகுறித்து 12.1.2022 அன்று தங்களுக்கு கடிதம் அனுப்பியிருந் தோம். எங்கள் கட்சியின் சார்பில் 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் வடசென்னை வளர்ச்சிக்கான இயக்கத் தில் இந்தக் கோரிக்கையும் மக்களிட மிருந்து முன்வந்துள்ளது என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தற்போது திருமங்கலம் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து ஆவடிக்கும், சிறுசேரியிலிருந்து கிளாம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து பரனூர் வரை மெட்ரோ ரயில் வழித் தடம் விரிவுபடுத்துவதற்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கி றது. இந்த புதிய வழித்தடங்களை வரவேற்கிறோம். அதே நேரம் கொல் கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதி யில் அமைந்துள்ள செங்குன்றம் வரை போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தினசரி மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் வழியாகவும், வடசென்னையின் விரி வாக்கம் பெற்று வரும் பகுதியாகவும் மாறி வருகிறது. வடசென்னையின் உள்கட்ட மைப்பை மேம்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கும் திட்டமிட்டுள்ளதாக தாங்கள் அறிவித்திருந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து காரனோடை வரை, விம்கோ நகரி லிருந்து எண்ணூர் வரை, மூன்றா வது திட்டமான மாதவரம் பால் பண்ணையிலிருந்து துவங்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் விரிவுபடுத்த முதலைமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயி தோட்டத்தில் மலைப்பாம்பு
விழுப்புரம், செப்.26- செஞ்சி அருகே சின்னபொன்னம் பூண்டியில் விவசாயி தோட்டத்தில் மலை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி சேர்ந்தவர் ராமசாமி. அவரது வீட்டு பின்பக்கத்தில் தோட்டம் உள்ளது. அதில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்ததை பார்த்த கிராம மக்கள், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்புக்காட்டில் விட்டனர்.
தலித், இஸ்லாமியர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை
ராணிப்பேட்டை, செப். 26 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 7ஆவது வார்டு ஜெயம் நகர் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட தலித், இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பூங்கா இடத்தில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்படுகின்றன.இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜெயம் நகர் பகுதி குப்பைகளை அகற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி. ரகுபதி தலைமையில் செவ்வாயன்று (செப். 26) நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்டச் செயலாளர் எபிஎம். சீனிவாசன், சிபிஎம் ஆற்காடு தாலுகா குழு செயலாளர் எஸ். செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, இந்த மாத இறுதிக்குள் குப்பையை அகற்ற தவறினால் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
மீன் கழிவு தொழிற்சாலையில் சுகாதார சீர்கேடு
மக்களை பாதுக்க சிபிஎம் கோரிக்கை
கடலூர்,செப்.26- கடலூரில் மீன் கழிவு தொழிற்சாலை யால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாவட்ட ஆட்சிய ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடலூர் ஒன்றியம், பச்சையாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தைக்கால் தோணித்துறை கிராமத்தில் 2017 ஆம் ஆண்டு பாண்டா பயோ புரோட்டீன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் கம்பெனி மீன் கழிவுகளை கொண்டு வந்து அதை அரைத்து செயற்கை புரத மாவு தயாரிக்கிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் ஏற்படும் சுவாசக் கோளாறு மற்றும் சரும நோய்களில் இருந்து காப்பாற்ற கோரி 2.10.2018 அன்று கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, உற்பத்தியை நிறுத்திக் கொண்ட அந்த நிறுவனம் தொழிற்சாலையை மூடியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் ஜூலை முதல் மீண்டும் தொழிற்சாலை செயல்படத் தொடங்கியது. இதனால், கிராம மக்கள் மீண்டும் சுகாதார சீர்கேடு களால் சிக்கி சீரழியும் அபாயம் ஏற்பட்டி ருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் ஆறு மற்றும் கடல் மட்டும் சார்ந்துள்ளது. இந்த தொழிற்சாலை மற்றும் சிப்காட் பகுதி யில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், ஆறு மற்றும் கடல் பகுதிகளில் கலந்து விடுவதால் மீன்கள் செத்து மிதக்கிறது. நீர்நிலைகள் மாசுபடுகின்றன. மேலும், சிப்காட் சுற்றி புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மக்களை பாதுகாக்கவும், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.
நோயால் வளர்ச்சி குன்றிய கரும்பு பயிர்: வேதனையில் புதுச்சேரி விவசாயிகள்
புதுச்சேரி, செப்.26- கரும்பு விவசாயிகளிடம் ஆலை நிர்வாகம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் புதுச்சேரி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் வே.சங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வந்த இரண்டு சர்க்கரை ஆலைகள் தற்போது மூடிக்கிடக்கிறது. கரும்பு பயிர் செய்யும் விவசாயிகள் தமிழ்நாட்டில் அருகாமையில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பி வருகிறார்கள். அரியூரில் இயங்கி வந்த ஈஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் அதற்கு சொந்த மான நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு இங்குள்ள கரும்புகளை அனுப்பி வருகின்றனர். புதுச்சேரி கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிடும் போது ஆலை நிர்வாகம் விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் என்று கரும்பு கட்டுப்பாடு சட்டம் அதையும் மீறி சில ஒப்பந்தங்களை பதிவேற்றி விவ சாயிகளிடம் கையொப்பம் பெறுகின்றார் கள். அந்த ஒப்பந்தங்கள் என்ன என்று விவ சாயிகளுக்கு தெளிவுபடுத்தவில்லை. நடப்பாண்டு கரும்பு பயிர் பொக்கோ, போவான் நோய் மற்றும் வேர் புழு தாக்குதலால் வளர்ச்சி குன்றி காய்ந்து வருகிறது. இந்த கரும்பை நம்பி வங்கிக் கடன் பெற்ற விவசாயிகள் கடனை அடைக்க முடியுமா? என்ற கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் வெட்டுக்கூலி , வண்டிக்கூலி போன்ற செலவுகளும் கூடுதல் சுமையை கொடுத்துள்ளது. எனவே கரும்புகளை சிறப்பு அரவைப் பருவத்தில் வெட்ட ஆலை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கச் செல்லும் போது தற்போது ஒரு படிவம் கொடுத்து அதில் கையொப்பம் கேட்கின்றனர். அதில் நான் 2023-24 ல் முக்கிய பட்டத்தில் கரும்பு பயிர் செய்திருந்தேன். கரும்பு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது சிறப்பு அரவை பருவத்தில் அறுவடை செய்து ஆலைக்கு அனுப்ப ஆவண செய்ய கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பும் பட்சத்தில் ஆலையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கரும்பினை அனுப்ப முழுமனதுடன் சம்மதம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலை நிர்வாகம் நோய் தாக்குதல் கரும்பு என்று டன் ஒன்றுக்கு ஏற்கனவே வழங்கப்படும் விலை குறைக்கப்படும் என்று சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்படுகிறது. ஆலை நிர்வாகத்தால் பரிந்து ரைக்கப்பட்ட கரும்பு ரகம் தான் விவசாயிகள் பயிர் செய்கிறார்கள். மேற்சொன்ன நோய் தாக்குதல் ஏற்பட்ட போது ஆலை நிர்வாகம் பரிந்துரை செய்த மருந்து ஒன்றுக்கு மூன்று முறை உபயோகித்தும் நோய் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. எனவே, புதுச்சேரி அரசு கரும்பு விவ சாயிகளை பாதுகாக்க ஆலை நிர்வாகம் புதிதாக விவசாயிகளிடம் போடும் ஒப்பந்த படிவத்தின் நோக்கத்தை தெளிவு படுத்த வேண்டும். ஆலை நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.