districts

சென்னை மேயர் பிரியா ெவளிநாடு பயணம்

சென்னை,ஜூன் 17-

    சென்னை மாநகர மேயர்  ஆர்.பிரியா ஒரு வார பயண மாக ஐரோப்பிய நாடுக ளுக்கு செல்கிறார்.  சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா சனிக்கிழமை யன்று(ஜூன் 17) இரவு ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து பிரான்சுக்கு சென்று பின்னர் இத்தாலிக்கு செல்கிறார்.

    மேயருடன் துணை மேயர்  மகேஷ்குமார் மற்றும் சுகா தாரத் துறை அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள்.  ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 24 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்கள்.  

    ஸ்பெயின், பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளில் கடைபிடித்து வரும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.

    இதுகுறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுற்றுச்சூழல் தீர்வுக்கு உலகத்தின் முன்னணியில் உள்ள உலகளாவிய நிறுவனம் அர்பேசர் ஆகும். அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்பெயினில் உள்ளது. நாங்கள் முதலில் அதை பார்வையிடுவோம்” என்றார்.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோமைனிங் செய்ய தொடங்குகிறோம். அதை பற்றி சில விஷயங் களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 2-வதாக குப்பை தொட்டி இல்லாத  நகரத்தையும் நாங்கள் விரும்புகிறோம். எனவே ஐரோப்பிய நாடுகள் அதை  எவ்வாறு செயல்படுத்து கின்றன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

   சென்னை நகரில் கழிவு மேலாண்மை தனி யார் மயமாக்கப்பட்டு வரு கிறது. எனவே குப்பை சேக ரிப்பு மற்றும் செயலாக்க  சேவைகளை மேம்படுத்த வும், கண்காணிக்கவும் இந்த பயணம் உதவும் என்றும் அவர் கூறினார்.