districts

img

15 லட்சம் வாசகர்கள் பங்கேற்ற சென்னை புத்தகக்காட்சி நிறைவு

சென்னை, ஜன. 21 - சென்னை புத்தகக்காட்சி ஞாயிறன்று (ஜன.21) நிறைவடைந்தது. 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜன.3 அன்று  தொடங்கியது. 19 நாட்கள்  நடைபெற்ற புத்தகக்காட்சி ஜன.21 அன்று நிறைவு பெற்றது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  (பபாசி) இந்த புத்தக் காட்சியை நடத்தியது. 800 அரங்குகள் கொண்ட இந்த புத்தக் காட்சியை 30ஆயிரம் மாணவ மாணிவிகள் உட்பட  சுமார் 15 லட்சம் பேர் பார்வை யிட்டதாகவும், 18 கோடி  ரூபாய் மதிப்பிலான புத்த கங்கள் விற்பனையானதாக வும் பபாசியின் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரி வித்தார். புத்தகக் காட்சியின் நிறைவு நிகழ்வில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்  அரங்க மகாதே வன், புத்தகக் காட்சி நடை பெறுவதற்கு உதவி புரிந்த வர்களை பாராட்டினார். பதிப்புத் துறையில் நூற்றாண்டு, பொன்விழா, வெள்ளி விழா கண்ட பதிப் பாளர்களையும் பாராட்டி கவுரவித்து பேசினார்.