districts

img

சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு

சென்னை,நவ.21- சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டா பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டபணியில் 6 அடுக்கு 'பல்லடுக்கு கார் நிறுத்து மிடம், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகிய வைகளும், பயணிகளுக்கு பாது காப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகிய வைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டர்கள், வி.வி. ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணி கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட வைகள் கட்டப்பட்டன.   இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.  அடுத்த மாத இறுதிக்குள் நவீன வசதிகளு டன் கூடிய முதல் கட்ட புதிய முனைத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சென்னை விமான நிலைய புதிய நவீன முனை யத்தை  ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை அவர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வும் அதிகாரிகளுக்கு அவர் அறி வுறுத்தினார். அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார், மத்திய தொழில்பாதுகாப்பு படைத்தலை வர்  மற்றும் அதிகாரிகள் உடன் இருந்த னர்.   இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடந்து பயன்பாட்டுக்கு வரும். அதன்பிறகு தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதைதொடர்ந்து 2-ம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்படும். இதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.