districts

சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள  தங்கம் பறிமுதல்

சென்னை, பிப். 3- துபாயிலிருந்து இசை கருவிக்குள் மறைத்துவைத்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ. 5 லட்சம் மதிப்புடைய 110 கிராம் தங்க ராடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு பயணிகள் விமானம்  வியாழனன்று (பிப். 3) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் 117 பயணிகள் வந்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பயணி களை கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடைமை களை சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணியின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கீ போர்டு  என்ற இசைக்கருவிக்குள் 40க்கும் மேற்பட்ட தங்க ராடுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது  செய்து, அவர் கடத்தி வந்த தங்க ராடுகளை பறிமுதல்  செய்தனர். அந்த தங்க ராடுகளின் மொத்த எடை  110 கிராம் ஆகும். அதன் சர்வதேச மதிப்பு சுமார்  5 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.