படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
விழுப்புரம்,டிச.28- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (46). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (21), ரவி (24), மணிபால் (35) மற்றும் ரஞ்சித் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க புதனன்று(டிச.28) அதிகாலை கடலுக்கு சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்களை பிடித்துக்கொண்டு வீடு திரும்பினர். அப்போது, அலையில் சிக்கி நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது. இதில் படகில் வந்த 4 பேரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விபத்தில் சிக்கிய கரும்பு லாரி
செங்கம், டிச.28- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் பெங்களூர் நெடுஞ்சாலை முதல் மில்லத்நகர் வரை சாலை ஆக்கிரமிப்பு செய்து சாலையின் இருபுறமும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தில் உரசி நின்றது. இதில் எந்த சேதமும் ஏற்ப டவில்லை. சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்திற்கு இடையூறாக நின்றதால் சாலை தடுப்பு சுவரை ஒட்டி லாரி சென்றது.
கொரோனா: படுக்கைகள் தயார்
வாலாஜா,டிச.28- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உருமாற்றம் அடைந்த பி.எப்.7 வகையில் உருவாகி அது வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த கொரோனா நெருக்கடி சவாலை சமாளிக்க நோய் தடுப்பு ஒத்திகையானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்து வமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மூலமாக ஏற்படும் நெருக்க டிகளை சமாளிக்கும் வகையில் நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.