districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா: பரிசோதனை மையங்கள் மீண்டும் திறப்பு

மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜன. 5- சென்னையில் கொரோ னா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாத இறு தியில் இருந்தே கொரோனா வின் தாக்கம் உயர்ந்து வரு கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15  மண்டலங்களிலும் ஏற்பட் டுள்ள கொரோனா பாதிப் புகளை சென்னை மாநக ராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக் களில் 1158 தெருக்களில் கொரோனா பாதிப்பு உடைய வர்கள் கண்டறியப்பட் டுள்ளனர். சென்னையில் 38,379  தெருக்களில் கொரோனா  பாதிப்பு எவருக்கும் இதுவரை கண்டறியப்பட வில்லை. 988 தெருக்களில் 3க்கும் குறைவாக தொற்று பாதித்தவர்கள் உள்ளனர். 170 தெருக்களில் 3க்கும் மேற்பட்ட  எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 86 தெருக்களில் 4க்கும் மேற்பட்ட எண்ணிக் கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். 51 தெருக்களில் 5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதித்தவர்கள் உள்ளனர். சென்னையில் மொத்த மாக 3,486 பேர் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக தேனாம் பேட்டை மண்டலத்தில் 228 தெருக்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதித்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். பரிசோதனை மையங்கள் பெருநகர சென்னை மாந கராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் கொரோனா பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடல் பரிசோதனை செய்வ தற்காக 15 மையங்கள் அமை க்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர் நகர்ப் புற சமுதாய நல மையம்  அருகில், மணலி மஞ்சம் பாக்கம் நகர்ப்புற சமுதாய நல மையம், மாதவரம் அரசு  மருத்துவமனை, தண்டை யார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரி, திரு.விக. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை, அயனாவரம் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, அம்பத்தூர் வார்டு 91 முகப்பேர் மேற்கு 3ஆவது பிரதான சாலையில் உள்ள சமுதாய நலக்கூடம், அண்ணாநகர் மண்டலத் ்திற்கு அயனாவரம் சென்னை தொடக்கப்பள்ளி, தேனாம் பேட்டை வார்டு  122  கே.பி.  தாசன் சாலை சமுதாய   நலக்கூடம், கோடம்பாக்கம்  வார்டு 139 ஜாபர்கான் பேட்டை சமுதாய  நலக்கூடம், வளசரவாக்கம் வார்டு 153  ராமசாமி நகர் பிரதான சாலை அரசு தொடக்கப்பள்ளி,  ஆலந்தூர் பி.வி. நகர் ஜெயின் கல்லூரி, அடை யாறு வார்டு 170 கிண்டி தொழிற்பேட்டை ஏடிஐ மருத்துவமனை, பெருங்குடி வார்டு 183 ஏ.ஜி.எஸ் காலனி  கொட்டிவாக்கம் சமுதாய  நலக்கூடம், சோழிங்க நல்லூர் ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்க ளில் இந்த முதற்கட்ட பரி சோதனை நடைபெறும்  இந்த 15 மையங்களில் தொற்று பாதித்த நபர்க ளுக்கு புதன்கிழமை (ஜன. 5) முதல்  முதற்கட்ட உடல் பரிசோதனை தொடங்கப்பட உள்ளது மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

விடுதியை கையகப்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும் இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 4 - விக்டோரியா மாணவர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா 3ஆவது அலை தொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா சிகிச்சைக்காக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விக்டோரியா விடுதியை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இது மாணவர்களி டையே குழப்பத்தை ஏற்படுத் தியுள்ளது. கல்வி வளாகம் செயல்படும் நிலையில் விடுதியை கையகப்படுத்து வது நியாயமாகாது. தேர்வு நடைபெற உள்ள நேரத்தில் விடுதியை கையகப்படுத் தினால் மாணவர்கள் தங்கும் இடம் கேள்விக்குறியாகும். விக்டோரியா விடுதியை மட்டும் குறிப்பிட்டு கூறுவ தில் சந்தேகம் எழுகிறது.   எனவே விக்டோரியா விடுதி மாணவர்களிடையே எழுந்துள்ள அச்சத்தை அரசு போக்க வேண்டும். மாண வர்களின் நலனுக்கு பாதிப் பில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.மிருதுளா, செயலாளர் எல்.விக்னேஷ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள னர்.

திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியரும் மனைவியும் கைது

சென்னை, ஜன. 4- சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் 1.32 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கொள்ளை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட 2 தனிப்படையினர் ரயில்  நிலையம் அருகில் உள்ள சிசி டிவி கேமாராவை ஆய்வு செய்தனர். அப்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண் ஒருவர் அதி காலை 4 மணி அளவில் ரயில் நிலையத் திற்குள் செல்வது போல் பதிவாகி இருந்தது.  அந்த பெண் குறித்து ரயில்வே காவல்துறை யினர் விசாரணை நடத்திய போது, அது டீகாராமின் மனைவி சரஸ்வதி என்பது தெரிய வந்தது. சந்தேகமடைந்த காவல் துறையினர் டீகாராமிடம் தீவிரமாக விசாரணை நடத்தி யதில், ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி  செலுத்த முடியாமல் போனதால்  வேறு  வழியின்றி தனது மனைவியுடன் சேர்ந்து  கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரது வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்கப்பட்ட 1.32 லட்சத்தை மீட்டு அவரது மனைவி சரஸ்வதியையும் கைது செய்தனர்.

பின்தங்கிய 69 பள்ளிகளுக்கு டேப்லெட் சாதனங்கள்

 சென்னை, ஜன. 4,  பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் தேவைகளை நிறைவேற்றும் வகையில்  பொருளாதார ரீதியாக பின்தங்கிய 69 பள்ளி மாணவர்களுக்கு மின்னணு டேப்லெட் சாதனங்களை  டிஎல்எப் அறக்கட்டளை விநியோகித்துள்ளது. சென்னை மணப்பாக்கம் டிஎல்எப் சைபர் சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 வயது முதல்  17 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த  மின்னணு டேப்லெட்கள் வழங்கப்பட்டன. தொற்று நோய்க்குப் பிறகு மாணவர்களின் பல்வேறு கல்வித் தேவை களை எளிதாக்குவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கம் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஎல்எப் நிறு வனத்தின் தென்னிந்தியாவிற்கான  மூத்த துணைத் தலைவர்  டேவிட் அமல்ராஜ் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான எல் சால்வடார் குடியரசின் கவுரவத் தூதர் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கட ராமன், ஏடிஜிபி ஷைலேஷ் குமார் யாதவ், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். 

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா தொற்று

செங்கல்பட்டு, ஜன 4- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கர்நாட காவில் இருந்து வந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். பண்டிகை நாட்களில் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால்  அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கோவில் வளாகத்தில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 3 பேருந்துகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு அண்மையில் வந்துள்ளனர். பின்னர் கர்நாட காவுக்கு திரும்பியுள்ளனர். 2 பேருந்துகளில் திரும்பிய வர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 35 பக்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது உறுதியானது. இதனை அம்மாநில சுகா தாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளனர். மேலும் அவர்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் மேல்மருவத்தூர் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. 

புதிய புனைவு தொடர்

சென்னை,ஜன.3 புராணக் கதையான வள்ளி திருமணத்தை தைரியமிக்க சுயமாக முடிவெடுக்கிற ஒரு பெண்ணை பற்றி, புதிய புனைவு  நெடுந்தொடராக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மாற்றி யுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8  மணிக்கு  ஒளிப்பரப்பப்படும் இந்த தொடர் குறித்து கலர்ஸ்  தமிழின் வர்த்தக பிரிவு தலைவர்  ராஜாராமன்  கூறுகை யில் “தற்போதைய நவீன யுகத்தில் சுதந்திரமாக செயல்படு கிற, சிந்திக்கிற மற்றும் சொந்த விருப்ப முடிவின் படி செயல் படுகிற புதுமைப்பெண்ணின் பிரதிபலிப்பாக வள்ளியின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வீட்டில் முடிவுகளை மேற்கொள்ளும் திறனுள்ள நபராக  ஒரு பெண் இருப்பதை இது சித்தரிப்பதோடு சுய கவுரவமும், சுய மதிப்பும் கொண்ட பெண்ணின் உணர்வை இதன் மூலம்  ஊக்குவிக்க இயலும்’ என்றும்  நம்புவதாக கூறினார்.