செங்கல்பட்டு, நவ.24- தாம்பரம் புலிக்கொரடு கிராமத்தில் நான்கு தலைமுறை யாக வாழ்ந்து வரும் கல்லு டைக்கும் குடும்பத்தைச் சார்ந்த 102 குடும்பத்தினருக்கு வனத்துறை யிடம் இருந்து முறையாக நிலம் பெற்று பட்டா வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் வட்டம் , புலிக்கொரடு கிராமம், ராஜீவ் காந்தி நகரில், சர்வே எண்.113 ல் , இரண்டு ஏக்கர் 33 சென்ட் தாம்பரம் காப்புக்காடு வன எல்லை நிலப்பரப்பில் 102 கல்லு டைக்கும் குடும்பங்கள் கடந்த நான்கு தலைமுறை காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தமிழக அரசிடம் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கடந்த 15 வருடங்களாக போராடி வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நியாயத்தை உணர்ந்த காப்புக் காடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வருவாய் துறைக்கு இவர்கள் குடியிருக்கும் நிலப்பரப்பிற்கு ஈடாக இருமடங்கு ஈடு நிலத்தை வழங்கினால் இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு விலக்களிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தியதின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட வரு வாய் துறையினர் ஈடு நிலமாக செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வேத நாராயணபுரம் தேவர்மலை பகுதி சர்வே எண்.96/1 ல் இரு மடங்கு நிலமான 4 ஏக்கர் 66 சென்ட் நிலத்தை அடையாளங்கண்டு புலத் தணிக்கை செய்து வனநிலமாக வகைமாற்றம் செய்து செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் மேற்குறிப்பிட்ட நிலபரப்பை ஏற்று இசைவு தெரி விக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலருக்கு கோப்புகளை அனுப்பி உள்ளார். சம்பந்தப்பட்ட இடம் சென்னை வன மாவட்டத்தில் வரு வதால் இந்த கோப்புகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வனத்துறை அலுவலகத்தில் கிடப்பில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தாம்பரம் தொகுதி குழுவின் சார்பில் வெள்ளியன்று (நவ. 24) கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி.சண்முகம் தலைமையில் பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், தாம்பரம் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா, முத்த தலைவர் கு.இராசன்மணி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் வி.அரிகிருஷ்ணன், சிஐடியு நிர்வாகி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாதர்சங்க நிர்வாகி ஆ.விஜயா, மலைவாழ் மக்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அழகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தேவா அருள்பிரகாசம், முன்னாள் தாம்பரம் நகர மன்ற தலைவர் கரிகாலன் உள்ளிட்ட பலர் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சென்னை மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பேசி உரிய முறை யில் நிலத்தை பெற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். இதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.