சென்னை,ஆக.13-
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி விலகியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எனது செயல்பாடுகளை பார்த்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் செயல்பட்டேன்.
தவிர்க்க இயலாத ஒருசில காரணங்களாலும் முற்றிலுமாக “அரசியலில் இருந்து ஒதுங்குவது” என முடிவுசெய்துள்ளதால் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விடைபெற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.