பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி வியாழனன்று (ஜன.11) தி.நகர் தலைமை அஞ்சலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஆர்.பி.சுரேஷ், ரமேஷ் (மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்), ஜாஸ்மின் ஜலால் பேகம், செந்தில்குமார், சந்திர மோகனகிருஷ்ணன், பாரதிதாசன், யுவராஜ் (என்.எப்.பி.இ), மோகன் ( ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ), சுந்தரமூர்த்தி (வருமான வரி ஊழியர் சம்மேளனம்), சேகர் ( அஞ்சல் கேசுவல் ஊழியர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.