கிருஷ்ணகிரி,அக்.17- ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட பேகேப்பள்ளி நடுநிலை பள்ளி கட்டி டத்தில் 10 நாட்களில் 3 முறை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்தது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மையை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே பேகே (ஆங்கில வழி கல்வி) ஒன்றிய அரசு நடு நிலைப் பள்ளியில் 144 மாணவி கள் உள்ளிட்ட 279 மாண வர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். பள்ளிக்கு போதிய கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் குறைவாகவே சேர்க்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதனால் அரசு சார்பில் குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-23 ன் கீழ் 1.1 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. கடந்த 26 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கட்டிடத்தை திறந்து வைத்தார். பயன்பாட்டிற்கு வந்து 10 நாட்களில் இரு முறை வகுப்பறையின் உட்புறம் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடந்த 6 ஆம் தேதி பூச்சு பெயர்ந்து விழுந்த போது மாவட்ட,வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் புகார் அளித்தும் அரசு அதி காரிகள் யாரும் வந்து பார்க்க வில்லை. பூச்சு பெயர்ந்து விழுந்த இடத்தை ஒப்பந்தகாரர் பூசிமெழுகி வெள்ளை அடித்து மறைத்துவிட்டார். இந்நிலையில் அக்.15 அன்று விடுமுறை நாளில் மீண்டும் ஒருவகுப்பறையின் உட்புறம் மேல் கூரையின் பூச்சு பெயர்ந்து விழுந்தது. தற்போதும் இப்போதும் அதிகாரிக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தலைமை ஆசிரியர் கௌரம்மா கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் கட்டிடத்தின் உறுதித் தன்மை,தரம் குறித்து உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.சுகாதாரமற்ற முறையில் கழிப்பறை உள்ளது. புதிய கட்டிடத்தை கட்டிட வும்,தரமற்ற கட்டிடத்தை கட்டியுள்ள ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரி யர்களும் சமூக ஆர்வலர்க ளும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.