districts

செல்போன் கோபுரம் பெண் தீ குளிக்க முயற்சி

வேலூர், ஜூன் 21 -

     வேலூர் வசந்தபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் நடைபெற்றது. அப்போது பெண் ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்தார்.

    வேலூர் கஸ்பா அடுத்த வசந்தபுரம் பர்மா குடியிருப்பு பகுதியில் 4ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியின் போது இவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

    அந்த பகுதியில் தனி நபர் ஒருவரின் வீடு பாழடைந்து இடிந்து விழும் நிலை யில், சிதிலமடைந்துள்ளது. இந்த வீட்டில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் (டவர்) அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வசந்தபுரம் ரயில்வே கேட் அருகே  சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது பெண் ஒருவர் மண்ணெண் ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

   அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை யினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாழடைந்த கட்டிடத்தின் மேல் எழுப்பி வரும் செல்போன் கோபுரத்தை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு