புதுச்சேரி, செப். 21- மக்கள் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு துவக்க விழா புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் கொண்டாடப்பட்டது. மக்கள் கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் நூற்றாண்டு துவக்க விழா வையொட்டி, கவிஞர் வாழ்ந்த புதுச்சேரி சாமிப் பிள்ளைத்தோட்டம், நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு அருகில் கவிஞர் தமிழ் ஒளியின் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் என்.கொளஞ்சியப்பன், இ.சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் அ.ஆனந்த், ஜி.சஞ்சய்சேகரன், மூத்தத் தலைவர்கள் டி.முருகன், வீ.ராமகிருஷ்ணன், இடைக் கமிட்டி உறுப்பினர்கள் வீர.அரிகிருஷ்ணன், டி.சுரேஷ், ஜெயபிரகாஷ் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களை சேர்ந்தவர்களும் கவிஞர் தமிழ்ஒளியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த னர்.