சென்னை, ஜூலை 26 - சென்னையின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மையமான சிம்ஸ் மருத்துவமனை, உலக ஐவிஎஃப் தின அனுசரிப்பின் ஒரு அங்கமாக பெற்றோர்களுக்கும் மற்றும் சிறார்களுக்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை திங்களன்று நடத்தியது. குழந்தைப்பேறு என்ற இலக்கை எட்டுவதற்கான தங்களது உணர்ச்சிப்பூர்வ மான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் மற்றும் தங்களது வாழ்க்கையை அது எப்படி மாற்றியிருக்கிறது என்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். சிம்ஸ் மருத்துவமனையில் ஐவிஎஃப் என்ற செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த 30 குழந்தைகள் பங்கேற்று கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சிம்ஸ் மருத்துவமனையில் இயங்கி வரும் மகப்பேறியல், மகளிர் நலவியல் மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை மையத்தில் மிக நவீன தொழில்நுட்பமும், அனுபவமும், திறனும் மிக்க மருத்துவமும், மேம்பட்ட தீர்வு களும் கிடைக்கப்பெறுகின்றன. குழந்தையி யல் மருத்துவ துறையைச் சேர்ந்த மருத்து வர்களும் மற்றும் அதன் பணியாளர்களும் இதில் பங்கேற்றனர். ஐவிஎப் சிகிச்சை மையத்தின் இயக்கு நர் டாக்டர் கோபிநாத் பேசுகையில், கருவுற இயலாமை என்ற பிரச்சனை எண்ணற்ற தம்பதியரை உணர்வு ரீதியாக பாதிக்கிறது. ஐவிஎஃப் போன்ற நவீன சிகிச்சை செயல்முறைகள் வழியாக தங்களுக்கென குழந்தை வேண்டுமென்ற விருப்பத்தை பூர்த்தி செய்கின்றனர் என்றார்.