districts

img

அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி காவலர்கள் சோதனை

விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்யப்பட்ட னர். இது தொடர்பாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது, காணாமல் போனது குறித்தும்  கெடார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து விழுப்பு ரம் மாவட்ட சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் காவல் துறை யினர் திங்களன்று(பிப்.20) விசா ரணையை தொடங்கினர். சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் அருண்பால கோபாலன் தலைமையில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை அன்புஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். ஆசிரம அலுவலர்கள், பணி யாளர்கள் தங்கும் அறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்கும் அறைகள், சமையல் அறை, உணவு பரிமாறும் இடம் ஆகிய வற்றை பார்வையிட்டதோடு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தங்கும் அறைகளில் மின்விளக்கு வசதி,

மின்விசிறி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்பு சங்கிலிகள், அவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ய பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்புகள், ரத்தக்கறை படிந்த பாய்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உடுத்திய துணிகள், 30க்கும் மேற்பட்ட முத்திரைகள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கடலூரில் 4 பேர் தப்பி ஓட்டம் விழுப்புரம் அன்புஜோதி ஆசி ரமத்தில் இருந்து மீட்கப்பட்வர்களில் 23 பேர் கடலூரிலுள்ள தனியார் காப்பக்கத்திற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த காப்ப கத்திலிருந்து பிரபு, முனியன், தமிழ், சுப்பிரமணியன் ஆகிய 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதனையடுத்து, கடலூர் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடலூர் -புதுவை எல்லை என பல பகுதிகளில் தேடி வந்தனர். இதில் சுப்புரமணியனை கடலூர் பேருந்து நிலையத்தில் கண்டுப்பிடித்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.