districts

மர்மநோய் தாக்கி கால்நடைகள் பலி

விழுப்புரம்,நவ.19- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற் குட்பட்டது கந்தாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள காணி மேடு, கந்தன் பாளையம், மண்ட கப்பட்டு, குரும்பூரம், முதலியார் பேட்டை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவ சாயிகள் உள்ளனர். இவர்கள் விவசாயத்திற்கு அடுத்த படியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வரு கின்றனர்.  அப்பகுதியில் அதிகப்படி யான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்க ளின் பொழுது விவசாயம் பாதிக்க ப்பட்டால் கால்நடைகள் வளர்ப்பதின் மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் நிலை உள்ளது.  இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதுபோல் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது. இதன் காரணமாக கந்தாடு ஊராட்சி யில் உள்ள காணி மேடு மண்ட கப்பட்டு குறும்புறம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடு கள் மர்ம நோயால் பாதிக்கப் பட்டு உயிர் இழந்து வருகிறது. இத னால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மண்டகப்பட்டு கிரா மத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.