திருவண்ணாமலை,செப்.5- தமிழ்நாடு மாநில கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ,திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 10 மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் அருள், அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வாசு அனைவரையும் வரவேற்று பேசினார் .சிறப்பு விருந்தினர் எம்.கோபி, தலைவர் எம்.சந்திரசேகரன், செயலாளர் பி.விஜயராஜா, பொருளாளர் எம்.சீனிவாசன் மாநில ஆலோசனை குழு தலைவர் கேசவன், மாவட்ட செயலாளர் எஸ்.செல்வம், தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.