புதுக்கோட்டை, நவ.19- புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே பட்டியல் வகுப்பைச் பாடகர் பிரகாஷ் மீது, சாதிவெறியர் கள் கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆய்க்குடி அண்ணா நகரில் வசிப்பவர் பிரகாஷ். புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரபலமான பாடகர். 2019-இல் ‘ஜீ தமிழ்’ தொலைக் காட்சியின் “சரிகமப” சீசன் 2-வின் போட்டியாளராக பங்கேற்றவர். இந்நிலையில், நவம்பர் 12 அன்று பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் கபிலன் ஆகியோர் வாராப்பூரில் காய்கறி மற்றும் பட்டாசு வாங் கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மேலுடையான்பட்டி நான்கு ரோடு அருகே, இவர்களை பின்தொடர்ந்த அடையா ளம் தெரியாத இருவர் பிர காஷ் மற்றும் கபிலனை வழி மறித்து சாதியைச் சொல்லித் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இருவரும் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, மேலும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டு பிரகாசை பாட் டில்களாலும், கற்களை வீசி யும் தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ள வர்கள் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி யுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகியோர் உடனடியாக மழையூர் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். இதில், பிரகாஷ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே உள்ளார். இந்நிலையில், பாதிக்கப் பட்ட பிரகாசை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி. சலோமி, செய லாளர் சி. ஜீவானந்தம் உள் ளிட்டோர் நடந்த விபரங்க ளைக் கேட்டறிந்தனர். பிரகாஷ் அவர்களிடம் பேசுகையில், “தாக்குதல் நடத்தியவர்களுடன் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. அந்தப் பகுதியில் நான் கச்சேரியில் பாடி வருவதால் என்னை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொது வாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேண்டுமென்றே வம்பி ழுப்பதும், கிண்டல் செய்வ தும் இந்தப் பகுதியில் வழக்க மாக இருந்து வருகிறது. அவர்களின் தாக்குதல், எங் கள் மீது கொலைவெறியுட னும், மோசமான காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இருந்தது. அக்கம் பக்கத்தினர் வந்தி ருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருந்தி ருக்கும்” என்று வேதனையு டன் தெரிவித்தார். இந்நிலையில், பட்டியலி னப் பாடகர் பிரகாஷ் மற்றும் கபிலன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் அறிக்கை வெளி யிட்டுள்ளார்.
“நடந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேத னையும் அளிக்கிறது. தங் களை சாதி ஆதிக்கப் பிரி வினர் எனக் கருதிக் கொள் ளும் சிலர், பொதுவாக பட்டி யலின சமூகத்தைச் சேர்ந்த வர்கள் மீது இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. எங்கள் அமைப்புகளின் சார்பில் இது போன்ற தீண்டாமைக் கொடு மைகளுக்கு எதிராக தொட ர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனாலும், தீண்டாமை வன் கொடுமைகள் நின்றபாடில்லை. எனவே, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசும் மாவட்ட நிர் வாகமும் உறுதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரகாஷ், கபிலன் இருவரையும் தாக்கிய வர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கவிவர் மன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், இச் சம்பவத்தில் கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.