districts

img

மின் கட்டண உயர்வு: முந்திரி ஆலைகள் வேலை நிறுத்தம்

கடலூர், செப்.25- மின் கட்டண உயர்வை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைகளில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 28,500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிரிட பட்டிருக்கின்றன. அதிலிருந்து சுமார் 22,168 மெட்ரிக் டன் முந்திரிகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்கு உற்பத்தியாகும் முந்திரிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. தமிழ்நாட்டில் தொழில் துறைக்கான மின் கட்டண உயர்வால் தொழில் துறை கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும், 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் திங்க ளன்று (செப்.25) மாநிலம் தழுவிய ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.  கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி முழுவதும் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.  இதுகுறித்து முந்திரி தொழில் துறையினர் கூறுகையில், “பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 20 விழுக்காடு ஏற்றுமதியாளர்கள் இருக்கிறோம். முந்திரி பருப்பு ரகம் பிரித்து, பதப்படுத்த 300 நடுத்தர தொழிற்சாலைகள் நடத்தி வரு கிறோம். இதுமட்டுமின்றி, 1000 சிறு-குறு தொழிற்சாலைகள், கிராமங்க ளில் சுமார் ஒரு லட்சம் பெண் தொழிலாளர்களும் முந்திரி கொட்டைகளை உடைத்து, பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் ரூ. 50 கோடிக்கு உற்பத்தி பாதித்துள்ளது” என்றனர். ராணிப்பேட்டை தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் ராணிப்பேட்டை சிப்காட், சிட்கோ பகுதியில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. 430 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பீக் அவர் மின் கட்டணம் திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.