districts

img

பெட்ரோலிய நிறுவனங்களுக்கிடையிலான கேரம் போட்டிகள் சென்னையில் தொடக்கம்

சென்னை, மார்ச் 20- பெட்ரோலிய நிறுவனங் களுக்கு இடையிலான கேரம் போட்டி சென்னையில் தொடங்கியது. பெட்ரோலிய நிறுவனங் களில் பணியாற்றும் ஊழி யர்களிடையே பல்வேறு விளையாட்டுகளை ஊக்கப் படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டு வருகின் றன. இதற்கென பெட்ரோலி யம் விளையாட்டு மேம் பாட்டு வாரியம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி 30ஆவது கேரம் போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்  தொடங்கியது. போட்டியை சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிர்வாக இயக்குநர் அர விந்த் குமார் தொடங்கி வைத்தார். மார்ச் 19 முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்கள் நடை பெறும் இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சிபிசிஎல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி, எச்பிசி எல், எம்ஆர்பிஎல், இஐஎல், பிஎல்எல் மற்றும் என்ஆர்எல் ஆகிய 8 அணிகளும், பெண் கள் பிரிவில் இஐஎல், சிபிசி எல், ஐஓசிஎல், ஓஎன்ஜிசி, எச்பிசிஎல், எம்ஆர்பிஎல் ஆகிய 6 அணிகள் பங்கேற் கின்றன. கேரம் போட்டிகளில் முன்னணி வீரர், வீராங்கனை கள், பெண்களுக்கான கேரம் விளையாட்டில் உலக சாம்பி யன் பட்டத்தை வென்ற ரேஷ்மி குமாரி (ஓஎன்ஜிசி), முன்னாள் உலக சாம்பியன் இளவழகி (ஓஎன்ஜிசி), முதல் தரவரிசை வீராங் கனை காஜல் குமாரி (ஐஓசிஎல்), மூத்த தேசிய சாம்பியன் கே.ஸ்ரீனிவாஸ் (ஐஓசிஎல்), முன்னாள் உலக சாம்பியன் யோகேஷ் பர்தேஷி (ஐஓசிஎல்) உள்ளி ட்டோர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில் சிபிசிஎல் இயக்குநர்கள் ரோஹித் குமார் அகர்வாலா (நிதி), பி.கண்ணன் (செய லாக்கம்), இணைச் செயலா ளர் கவுதம் வதேரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.