காஞ்சிபுரம்,ஆக.20-
காஞ்சிபுரம் பேருந்து நிலை யம் அருகே உள்ள கவரை தெரு வில் அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதை யொட்டி சனிக்கிழமையன்று (ஆக.19) பாலாஜி தெருவில் நடை பெற்ற சாமி ஊர்வலத்தில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் வெங்கடேசனை (50) ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் புகைப்பட கலை ஞர் வெங்கடேசன், இசைக் கலைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் மீது மோதியது. இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதையடுத்து திருவிழா நிறுத்தப்பட்டது.