சென்னை, ஆக. 13-
சென்னை நுங்கம்பாக்கத்தில் குடி போதையில் கார் ஓட்டி வந்ததால், காவல் துறையினர் காரை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை காவல் நிலையத்திற்குள் புகுந்து திருடிய காரின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை சந்திப்பில் சனிக்கிழமை நள்ளி ரவு நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவப்பு நிற மாருதி காரில் வந்த நபரை நிறுத்தி பரி சோதனை செய்தபோது அவர் மது போதை யில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது.
வாகனம் ஓட்டிய நபர் தனியார் நிறு வன ஊழியர் அருண் கல்யாண் என்பதும், மது அருந்திவிட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லாத தால் அவரது காரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறையினர் அபராத தொகையை செலுத்திய பின்னர் ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைத்து விட்டு காரை எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்து அந்த நபரை அனுப்பியுள்ளனர். பின்னர், பறிமுதல் செய்த காரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.
பிறகு அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்ட இடத்தில் அந்த கார் இல்லாததால் காவல் துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது காரின் உரிமையாளர் மாற்று சாவியை கொண்டு வந்து அவரது காரை அங்கிருந்து எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து காவல் துறையினர் அருண் கல்யாணகுமார் மீது கார் திருட்டு வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.