districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பிரச்சாரம்

திருநின்றவூர் நகராட்சி 16-வது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.சரிதா வாக்காளர்களை சந்தித்து இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  பெரியார்நகரில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் ஒன்றிய செயலாளர் ஜே.ராபர்ட்எபிநேசர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மீஞ்சூர் பேரூராட்சி 18-வது வார்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.ரமேஷ்குமார் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வி.குமார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.விஜயன், ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் இ.n ஜயவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், ஜி.வி.எல்லையன், ஜி.வினாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வேட்பாளர் வி.குப்பசாமி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வசந்த், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 3-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.ஆர்.லட்சுமணன் வாக்கு சேகரித்தார்.இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், சீனு, கோபாலகிருஷ்ணன், சிவகுமார், உட்பட பலர் பங்கேற்றனர்.