மதுராந்தகம், ஏப்.2- மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி களில் திமுக வேட்பாளர் க.செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி யில் திமுக சார்பில் போட்டியி டும் வேட்பாளர் க.செல்வம் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள பிலாப்பூர் ஊராட்சி யில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை யில் தொடங்கினார். இப்பிரச்சாரத்தில் கூடியி ருந்த பெண்களிடம் எம்எல்ஏ சுந்தர் பேசுகையில், மோடிக்கு வாக்களித் தால் பெண்களின் உரிமை கள் பறிக்கப்படும் சமூக நீதியும் மறுக்கப்படும். தமிழகத்தில் 40க்கு 40 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற செய்தால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் நபர் பிரதமராக வரக்கூடும் அதனால் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள் வரக்கூடும் என பேசினார். இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்றத் திற்கு உட்பட்ட மெய்யூர், மாமண்டூர், வையா வூர், பட்டாளம், எல்என் புரம், பூதூர், கள்ளபிரான் புரம், கினார், தேவத்தூர், முதுகரை, ஓணம்பக்கம், ஜமீன் எண்டத்தூர், அரியா னூர் உள்ளிட்ட கிராமங் களில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரித் தார். பிரச்சாரத்தின் போது கிராமத்தில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றிய செயலா ளர் சத்திய சாய், மாவட்ட ஊராட்சி குழு பெருந் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், சிபிஎம் மதுராந்த கம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.மாசிலா மணி, எம்.எஸ்.அர்ஜுன் குமார், ஊராட்சி மன்ற தலை வர்கள் தமிழரசன், சித்ரா தனசேகரன், சுந்தர வரதன், சந்திரபாபு, சுரேஷ், தேவி அரசு, சிகா மணி, குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஏழுமலை உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.