districts

போட்டி தேர்வு, உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.2-

    போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உதவித் தொகை, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்,

     ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப் பட்டது.  

   போட்டித் தேர்வுப் பிரிவு தமிழ்நாடு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வு களில் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சித்  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  

    இந்நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறி விப்பில், “இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமைப் பணி  தேர்வுக்குப் பயின்று வரும் 1,000 மாண வர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

   முதல் நிலைத் தேர்வுக்குத் தயாரா வதற்கு  ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய்  வழங்கப்படும். இது சமீப காலமாக ஒன்றிய  அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டிருக்கும் மாபெரும் முயற்சியாகும்.

    இதன் மூலம் குடிமைப் பணிகள் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு ஊக்கத் தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாண வர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 10 மாதங்க ளுக்கு வழங்கப்படும்.

   ஏற்கெனவே அண்ணா நிர்வாக பணி யாளர் கல்லூரி யின் கீழ் இயங்கி வரும் அகில இந்தியக் குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான (சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் மாண வர்கள், https://www.naanmudhaivan.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆக.2 முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 17.8.2023 ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.