பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் முன்பு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் சண்முகம், மாவட்டத் தலைவர் பிரபாகர், கிளை நிர்வாகிகள் கோவிந்தன், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.