districts

img

காலமானார்

சென்னை, ஜன. 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஆர்கே  நகர் பகுதிக் குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன் செவ்வாயன்று  (ஜன. 23) காலை காலமானார். இவர் எவரெடி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியில் சேர்ந்ததில் இருந்து தொழிலாளர்களின் பல்வேறு  பிரச்சனைகளில் முன் நின்று போராட்டங் களை நடத்தியவர். சாலையோர வியாபாரிகள் சங்க தலைவராகவும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஆர்.கே.நகர் பகுதி தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். தனது இறுதி மூச்சு வரை தொழிலாளர்கள், வியாபாரி கள், பொதுமக்கள், மீனவர்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர் ராஜேந்தன். அவரது இறுதி ஊர்வலம்  புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை புதுவண்ணாரப் பேட்டை புச்சம்மா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு காசிமேடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.