districts

img

பயணிகள் கூட்டத்தால் தாம்பரம், திருவள்ளூர் மார்க்கத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்க திட்டம்

பொன்னேரி,ஏப்.2- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்ட்ர லில் இருந்து திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்று வரும் ரயில்களில் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும். எனவே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரை 4 ரயில்பாதைகள் உள்ளன. ஆனால் அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 2 பாதை கள் மட்டுமே இருக்கிறது. இந்த பாதையில் புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் கூடுதலாக ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது. மேலும் சரக்கு ரயில், விரைவு ரயில்கள் காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் விம்கோ நகர் இடையே குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  இதனால் கால தாமதம் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர். பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் எண்ணூரில் இருந்து புறநகர் ரயில்களில் வரும் பெரும்பாலானோர் சென்ட்ரலில் இறங்கி, தாம்பரம் அல்லது செங்கல்பட்டு பகுதியில் உள்ள பணி யிடங்களுக்குச் செல்வார்கள். கும்மிடிப் பூண்டியில் இருந்து வரும் ரயில்கள் விம்கோ நகருக்கு பின்னர் மெதுவாக இயக்கப்படுகிறது. மேலும் பேசின் பாலத்தை கடக்க சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால் தற்போது பலர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரயிலுக்கு மாறி சென்ட்ரலை விரைவாக வந்தடையும் நிலை உள்ளது. இதற்கிடையே கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவையை அதிகரிக்க அத்திப்பட்டு -கும்மிடிப்பூண்டி இடையே புதிதாக 3-வது, 4-வது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான திட்ட அறிக்கை தயாரானதும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.