districts

img

தீக்காயம், பக்கவாத சிகிச்சை மையம் விரைவில் துவக்கம்

வேலூர், நவ.8- வேலூர் நறுவீ மருத்துவ மனையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கும்,  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளது என அம்மருத்துமவனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ மனை வளாகத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:- வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவ மனையில், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. சிகிச்சையில் குண மடைந்த நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியையும் இம்மருத்துவ மனையில் மூலம் நடை பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு மூன்றாண்டு ஆகிறது. இந்த காலகட்டத்தில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநி லங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இதய சிகிச்சை, நுரை யீரல், மகப்பேறு மருத்து வம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு,குடல் நோய் சிகிச்சை,மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வித மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குண மடைந்துள்ளனர். இதுவரையிலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரைப்பை குடல் நோயால் பாதிக்கப்பட்ட 8500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட 1500 பெண்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்றுள்ள னர் என்பது குறிப்பிடத் தக்கது. இம்மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணி முழு நேர மாக நடத்தப்பட்டு வரு கிறது. ரத்தப்புற்று நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை இந்தியா வில் புகழ்பெற்ற பத்மஸ்ரீ மருத்துவர் மாமன் சாண்டி தலைமையில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்க ளுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி பெறப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்த சந்திப்பின் போது மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத். செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ், மருத்துவக் கல்வி இயக்குநர் திலீப் மத்தாய், பொது மருத்துவத் துறை தலைவர் குரியன் தாமஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் உடனி ருந்தனர்.