திருவள்ளூர், ஜூன் 19-
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது கனமழையின் காரணமாக 1257 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் நீர் வரத்துக் கால்வாய் கள் மூலமாக 330 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் செம்பரம்பாக்கம் எரிக்கு 289 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு பெய்துவரும் மழையின் காரணமாக ஏரிகளில் உள்ள நீர் இருப்பு கூடி வருகிறது. பூண்டி ஏரியில் கடல் போல் மேலெழும் அலைகளால் மதகுகள் அருகே கரைகளின் மேல் விரிசல்களால் மண் சரியும் அபாயம் உள்ளது.
மேலும் பூண்டி ஏரி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராள மான இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து கொண்டிருக்கின்றனர். எனவே மழைக்கு முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.