பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், பழைய ஒப்பந்த முறைப்படி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைச் செயலாளர் சி.ஞானசேகரன், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.