districts

img

சுய பரிசோதனை மூலமாக மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறியலாம்

சென்னை, அக். 30 -  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சென்னை அடை யாறு பாலக் மருத்துவ மையம் மற்றும இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி)  சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரஞ்சிதா சுதந்திரம் இதில் கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை விளக்கினார். தற்போது மார்பக புற்றுநோயை குணப்படுத்த ஏராள மான சிகிச்சை முறை கள் வந்துள்ளதாகவும் ஆரம்பத்திலேயே இந்த பாதிப்பை கண்ட றிந்தால் குணப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார். சுயபரிசோதனை மற்றும் மோமோகிராம் பரிசோதனை மூலமாக இதனை எளிதாக கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.   பல கல்லூரிகளுக்கு சென்று மார்பக புற்று நோயை  குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தியுள்ள அவர் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் தடுப்பு,  குறித்தும் அவர் எடுத்து ரைத்தார். இந்த நிகழ்ச்சி யில் ஃபிக்கி நிர்வாகிகள் பிரசன்னா வசநாடு, நியதி ஏ.மேத்தா, ரச்சனா குமார்,  பாலக் மருத்துவ மைய மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். உதய சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.