districts

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

அம்பத்தூர், ஆக. 7-

      சென்னை வளசர வாக்கம் மேற்கு காமகோடி நகரை சேர்ந்தவர் பிரசாத் (31). இவர் சென்னையில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் ராணிப்பேட்டை. இந்நிலையில் பிரசாத் சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ராணிப் பேட்டைக்கு சென்றார்.

   இந்நிலையில் பிரசாத் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதைக் கண்டு வீட்டின் உரிமையாளர் சங்கர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை யில் உள்ள பிரசாத்திற்கு தக வல் அளித்தார்.

    அங்கிருந்து பிரசாத் வீட்டிற்கு வந்து பார்த்த  போது, பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த 10 சவரன் நகை, அறையில் இருந்த மடி கணினியும் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது. .

   இதுகுறித்து பிரசாத் வளசரவாக்கம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.