districts

img

சாலை விபத்தில் மூளைச் சாவு வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

அம்பத்தூர், ஜூலை 22-

     பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் (23). அவரது நண்பர் ரஞ்சித் (20). இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார்.

   பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரஞ்சித் ஓட்டி சென்ற பைக் மோதியதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்தோஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சந்தோஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.