districts

img

வெறிநாய் கடித்து சிறுவன் சாவு

கடலூர், டிச.2 - கடலூர் மாவட்டம், நெய்வேலியில் வெறிநாய்  கடித்து பள்ளி மாணவன்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  நெய்வேலி அருகே வடக்குத்து பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் அன்பழகன்  இவர் தனது வீட்டின் அருகே  தையல் கடை நடத்தி வரு கிறார். இவரது மகன் ராகுல் (12). இவர்  நெய்வேலியில் உள்ள என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டி ருந்தபோது  திடீரென்று ராகுலை தெரு நாய் கடித்தாக  கூறப்படுகிறது. பின்னர்  சிறுவனனை பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர் நாய் கடிக்கு ஊசி போட்டுள்ளார். நல மாக இருந்தால் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அதன் பிறகு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட் டுள்ளது. இதனால், மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் உடலில் மாற்றம் ஏற்படவே, கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் துள்ளனர். அங்கு பரிசோ தனை செய்தபோது ‘ரேபிஸ்’ நோய் தாக்கி யிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்தபோது உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திடீர் திடீரென குரைக்கக் துவங்கியதால், அங்கிருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராகுல் உயிரிழந்தார். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி ராகுல் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்ககாமல் சுகாதாரத்துறையினர் கடலூரில் அடக்கம் செய்தனர்.