திருவள்ளூர், டிச .19- தமிழ்நாட்டில் காணாமல் போன 8 வயது சிறுவன் ஆந்திராவில் கோணி மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் - சிந்துமதி தம்பதி. தமிழ்நாடு - ஆந்திர எல்லையை ஒட்டிய பகுதியில் வசித்து வரும் சுரேஷ், ஆந்திர மாநிலம் தடா ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். சிந்துமதி கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வருகிறார். இவர்களுக்கு 10வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இவரது மகன் ஹனீஷ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (டிச 16), விடுமுறை நாளில் பல்லவாடா பகுதி யில் கிராம கிறிஸ்துமஸ் பாடல் குழுவுடன் (கேரல்ஸ்) ஹனீஷ் சென்றுவிட்டதாக அவரது தாயார் கருதியுள்ளார். இரவில் பாடல் குழு வினர் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் ஹனீஷ வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே, இது தொடர்பாக ஹனீஷின் தாய் சிந்துமதி பாதிரி வேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பாதிரிவேடு காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனி டையே அதே பகுதியை சேர்ந்த ரேகா என்ற உறவுக்கார பெண், இரு சக்கர வாகனத்தில் அந்த சிறுவனை அழைத்து சென்றதை யும், ஆந்திர மாநிலம் தடா அருகே சென்றபோது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி ரேகா வும், சிறுவனும் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் அங்கிருந்து ஆட்டோவில் செல்லும் போது அதே கிராமத்தினர் கேட்டதற்கு உறவினர் வீட்டிற்கு செல்வதாக ரேகா கூறியதையும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் பாதிரிவேடு காவல் துறையினர் ரேகாவிடம் நடத்திய விசாரணை யில், தமக்கு பணத்தேவை இருந்ததாகவும், ரூ.20லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதற்காக சிறுவனை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்றதாகவும், ரமணய்யா என்பவருடன் சேர்ந்து ஆந்திர மாநிலம் வரதைய்யபாளையம் அடுத்த ஒரத்தூர் என்ற பகுதியில் பி.என்.கண்டிகை காவல் நிலைய எல்லையில் கொலை செய்து சாலை ஓரத்தில் கோணிப்பையில் போட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திர மாநிலம் பி.என்.கண்டிகைக்கு சென்ற பாதிரிவேடு காவல் துறையினர் ஆந்திர மாநில காவல்துறையின் உதவியுடன் நடத்திய தேடுதலில் கோணிப்பையில் இருந்து சிறுவன் ஹனீஷ் சடலம் கண்டெடுக்கப் பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆந்திராவில் தொடர்புடைய ரவணய்யாவை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாகவும், ரவணய்யாவை கைது செய்த பிறகே கடத்தலின் முழு விவரம் தெரிய வரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனி டையே சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த கிராம மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதர்பாக்கத் தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனை நரபலி கும்பலிடம் விற்று பணம் சம்பாதிப்பதற்காக உறவுக்கார பெண்ணே கடத்தி சென்றதாகவும், இந்த கடத்தலில் பெண்ணின் பின்புலத்தில் தொடர் புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொது மக்கள் 200க்கும் மேற்பட் டோர் தொடர் சாலை மறியல் செய்தனர் . காவல்துறை யினர் உரிய முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில்லை எனவும், அனைத்து கிராமங்களிலும் கண் காணிப்பு கேமராக்களை பொருத் திட வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். தொடர்ந்து அவர்களி டம் சமரசம் பேசிய காவல்துறையி னர் களைந்துபோக செய்தனர்.