சென்னை, ஏப். 24- ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் உலக புத்தக தின விழா ஐசிஎப் தெற்கு காலனியிலுள்ள குறிஞ்சி நன்னல மையத்தில் கொண் டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “சில நேர்காணல், கேட்ட தால் சொல்ல நேர்ந்தது” என்ற நூலை ஐசிஎப் ஓய்வு பெற்ற அதிகாரி அ.மாணிக்க வாசகம் வெளியிட திரைக் கலைஞர் ரோகிணி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ச.தமிழ்ச்செல்வன் பேசு கையில், “பண்பாட்டு கலையை தொழிற்சங்கம் கையில் எடுத்தால்தான் அது மக்களிடம் எளிதில் சென்ற டையும். பண்பாடு என்ற பெயரில் ஆட்சி யாளர்கள் தொழிற்சங்க வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். இந்தியா மதச்சார்பற்ற சோசலிச குடியரசு நாடு. பல மொழிகளை கொண்ட கட்ட மைப்பாகும். இந்த இரண்டிற்கும் இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஆத்மா அழிந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தொழி லாளர்களிடையே, பொது மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். ரோகிணி பேசுகையில், “கொரோனா தொற்றுக்கு முன் நாடு என்ன நிலையில் இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். அனைவரும் சமமாக நடந்து கொள்ள இந்த புத்தக தினம் பயன்படட்டும் என்றும் புத்தக வாசிப்பு நம் வாழ்வில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார். எழுத்தாளர் அப்பண சாமி, “பண்பாடுஅழிந்து வருகிறது.
அதை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு புத்தக வாசிப்பு மிக அவசியமாகிறது. பிற்போக்கு கருத்துக்கள் நாளுக்குநாள் மேலொங்கி வருகிறது. முற்போக்கு கருத்துக்களை, இலக்கி யங்களை, கலைகளை நாடகம், பாடல் என பல வகைகளில் அனை வரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம்”என்றார். வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் புரு ஷோத்தமன், சிஐடியு முன்னோடி ராமச்சந்திர வைத்தியநாத், ஐசி எப் சில்வர் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளி முதல்வர் காஞ்சனா மாலா, இந்திய சாரணர் இயக்க முன்னாள் அமைப்பாளர் எம்.ஜீவரத்தினம். பி. மோகன்தாஸ் (ஏஐஆர்எப்), வ.முரளிதரன் (தொமுச), டி.எம்.செந்தில்குமார் (ஐஎன்டியுசி), டி. ராஜேந்திரன் (ஏஐடியுசி) கே. கோபிநாத் (ஐஆர்டிஎஸ்ஏ), பா.ராஜாராம், எம்.வி. கிருஷ்ணகுமார், வி.மோகன் (யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன்) ஆகியோரும் பேசினர்.