districts

img

வேலூரில் நூல்கள் அறிமுக கூட்டம்

வேலூர், பிப்.4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டக் குழு சார்பாக நூல்கள் அறிமுகக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஆர்.லோகேஷ் வரவேற்றார்.  கவிஞர் முல்லை வாசன் எழுதிய ‘முல்லைவாசன்’ கவிதைகள் நூலை முத்து சிலுப்பன் பெற்றுக் கொண்டார். மறைந்த வேலூர் இளையவன் எழுதிய ‘எதிர்காற்று மிதிவண்டி’என்கிற நூலை ரமேஷ், துர்கா தேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சகுவரதன் எழுதிய ‘போன்சாய்’ கவிதைகள் நூலை எழுத்தோவியன், ராம.சுடர்க்கொடி ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். சிறப்பு பிரதிகளை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட பொது செயலாளர் எஸ்.ராமன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்டத் தலைவர் பெ. அமுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிறைவாக வேலூர் கிளை தலைவர் ஆர்.கேசவன் நன்றி கூறினார்.