திருவள்ளூர், பிப் 24- திருவள்ளூரில் 3-வது புத்தகத் திருவிழாவினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வை யிட்டார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில் திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பப்பாசி இணைந்து நடத்தும் 3 வது புத்தக திரு விழாவை சனிக்கிழமை யன்று (பிப் 24), கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். புத்தக திருவிழா பிப் 24 அன்று துவங்கி மார்ச் 4 வரை 10 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக திருவிழா நடைபெறும். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலையில் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் களின் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 விழுக் காடு தள்ளுபடி வழங்கப் படுவது குறிப்பிடத்தக்கது. துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர், கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலு வலர் ஆ.இராஜ்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ண சாமி, டி.ஜே.கோவிந்த ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் (கவிதா பப்ளிகேஷன்) சேதுசொக்கலிங்கம், செயலாளர் முருகன், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட இதில் பலர் கலந்து கொண்டனர்.