districts

img

திருவொற்றியூரில் புத்தக கண்காட்சி

திருவொற்றியூர்,ஏப்.24- உலக புத்தக தினத்தை முன்னிட்டு திரு வொற்றியூரில் புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவொற்றியூர் எல்லை யம்மன் கோவில் அருகே கிளை நூலகத்தில் சுமார்  25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், முதியோர்கள் பிரிவு, கணினி பிரிவு, போட்டித் தேர்வுகள் பிரிவு, காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்று திறனாளிகள் பிரிவு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் செயல்படுகின்றன. இங்கு உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வரு கிறது. இந்த கண்காட்சி வருகிற மே 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஏழு பதிப்பகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக தினவிழாவை முன்னிட்டு அனைத்து புத்தகங்களும் 20 விழுக்காடு தள்ளுபடி யில் விற்பனை செய்யப்படு கின்றன.

;