சென்னை, மே 1 - நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை, வேறு பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய மீனவர் தலைவர்களை ஞாயிறன்று (ஏப்.30) காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாப்பூர் பகுதி நொச்சிக் குப்பம் மீனவ மக்களுக்களின் விரிவடைந்த குடும்பங்களுக் காகவும், சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகள் கிடைக்காதவர்களுக்காக வும் சாந்தோம் மற்றும் நொச்சிக் குப்பம் இடையே உள்ள இடத்தில் 1188 குடியிருப்புகள் (1 பிளாக் 108 வீடுகள் என்ற முறையில் 11 பிளாக்குகள்) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப் பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. 2021ல் டுமிங் குப்பம் பகுதியில் உள்ள வாரிய வீடுகள் மிகவும் சேத மடைந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளதால் இரண்டு பிளாக்கு கள் 216 வீடுகள் மட்டும் அவர்க ளுக்கு ஒதுக்கீடு செய்ய மயிலை சட்ட மன்ற உறுப்பினர் த.வேலு, வாரிய அதிகாரிகளும் அப்பகுதி மக்களிடம் கேட்டனர். இதனை நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் நிராகரித்தனர். அதனையும் மீறி டுமிங் குப்பம் மக்க ளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டது. 2022ல் இறுதியில் 98 வீடுகள் (ஒரு பிளாக்) சுனாமியால் பாதிக்கப் பட்டு வீடுகள் கிடைக்கப் பெறாத வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது. எஞ்சிய 874 வீடுகளும் நொச்சி க்குப்பம் மக்களுக்கே வழங்கப் படும். வேறு பகுதி மக்களுக்கு ஒதுக்க மாட்டோம் என்று வாரிய அதி காரிகளும், சட்டமன்ற உறுப்பி னரும் உறுதியளித்தனர். இதன் பேரில் வாரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பயனா ளிகள் பட்டியல் தயாரித்து வரு கின்றனர்.
இதற்கு மாறாக, ஏப்.26 அன்று டுமீங் குப்பம் மற்றும் செல்வராஜ் கிராம மக்களுக்கு, 324 வீடுகளை (3 பிளாக்குகள்) ஒதுக்கீடு செய்து, குடியமர்த்த வாரிய அதிகாரிகள் முயற்சித்தனர். நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு இந்த முயற்சியை தடுத்து நிறுத்தி குடி யேறும் போராட்டத்தை தொடங்கி னர். இதனையடுத்து, ஏப்.28 அன்று மெரினா காவல் நிலையத்தில் காவல்துறையினர், வாரிய அதிகாரி கள் மற்றும் சட்டமன்ற உறுப்பின ருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது; போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், நொச்சிக்குப் பத்தில் ஞாயிறன்று (ஏப்.30) காவல் துறையினர் பெருமளவில் குவிக் கப்பட்டு, போராட்டத்தில் இருந்த வர்களை காவல்துறையினர் அராஜ கமாக கைது செய்தனர். இந்த போராட்டத்தில் சிபிஎம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, நொச்சிக்குப்பம் களைச் செயலாளர் அன்புரோஸ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மீனவர் பஞ்சாயத்து தலைவர்கள் ஆர்.பாரதி, எஸ்.ரூபேஷ்குமார், ரவிக் குமார், கோசு மணி ஆகியோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடை க்கப்பட்டனர்.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காமராஜர் சாலை, லூப் சாலையில் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.முகமதுரஃபி, எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிடோர் போராட்டத்தில் பங்கேற்றனர். சிபிஎம் கண்டனம் “காவல்துறையின் இந்த அராஜக போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு தலையிட்டு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது பதியப் பட்டுள்ள வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்ய வேண்டும். 874 வீடுகளையும் நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கே வழங்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத் துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.