districts

img

ஒன்றிய அமைச்சரை கைது செய்யக்கோரி கருப்பு கொடி போராட்டம்

தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி-விழுப்புரம்

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஒன்றிய-மாநில பாஜக கூட்டணி அரசுகளை கண்டிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடிகளுடன் பங்கேற்றனர்.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர்-திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஓசூரில் நடைபெற்றது. திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே சிஐடியு, தொமுச தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்-ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வட மாவட்டங்கள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.