விழுப்புரம், மார்ச் 28- விழுப்புரம் அருகே ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் அருகே கண்டமானடியில் செல்லும் விழுப்புரம் -திருச்சி ரயில் பாதையில் அங்கு உள்ள ரயில்வே கேட் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது, இதனை எதிர்த்து ஜானகிபுரம், கண்டமானடி, உள்ளிட்ட அவ்வழியை பயன்படுத்தும் பல்வேறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வெள்ளியன்று கிராமத்தில் அனைத்து கிராம மக்களும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.